Monday 13 January 2014

பிறந்த நட்சதிரதன்று

பிறந்த நட்சதிரதன்று
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய 
ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் 
நடக்க ஆரம்பிக்கும் 

Sunday 12 January 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்

 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போதுதான்
 அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு
 முன் செல்வது நலம்.......!

ஏழரைச் சனி ,விரைய சனி, அஷ்டம சனி

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் 
கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. 

ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார்.  கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும். 


எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். 

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. 


ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். 

இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம். 

Saturday 11 January 2014

பைரவர் வழிபாடு

துன்பங்களில் இருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறப்பானது. எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள், பெரிய அளவில் பரிகாரமோ, பூஜையோ, ஹோமமோ செய்ய முடியாதவர்கள் அல்லது அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பைரவ வழிபாட்டினை மேற்கொள்ளலாம். விநாயக பெருமானை வணங்கி விளக்கு ஏற்றி (எந்த விளக்கும் ஏற்றலாம்), பிறகு பைரவ வழிபாட்டை தொடங்க வேண்டும்.  
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, உங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் விளக்கு போட வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம். இல்லையெனில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். வாரத்தின்ஒருநாள்சனிக்கிழமையாகஇருப்பின்சிறப்பானது. .
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்புநிற அரளியால்வழிப்பட்டால் நல்லமக்கள் செல்வங்களைப் பெறலாம் . அஷ்டமி திதியில்மற்றும் பிரதி தமிழ்மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் , சுவாதிமிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிப்பட்டால்உத்தியோகத்தில் மதிப்பும் , பதவி உயர்வும் கிட்டும் தொழிலில் லாபம்கிட்டும் .
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிப்பட்டால்வழக்குகளில் 
வெற்றிகிட்டும் .

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிப்பட்டால் காலத்தினால்தீர்க்க முடியாத 
தொல்லைகள் நீங்கும் . நல்லருள்கிட்டும் . பஞ்ச தீபம்என்பது இலுப்பைஎண்ணெய் , 
விளக்கெண்ணெய் , தேங்காய்எண்ணெய் ,நல்லெண்ணெய் , பசுநெய் ஆகும் . இவற்றை
 தனித்தனி தீபமாக ஏற்றவேண்டும் . அகல் விளக்கில் ஏற்றலாம் . ஸ்ரீ பைரவருக்கு இந்த 
பஞ்ச தீபம்ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் .

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொருசெவ்வாய்தோறும் பைரவரைவணங்கி "கால பைரவ அஷ்டகம்படித்துவந்தால் எதிரிகளை அழித்து , கடன்கள்தீர்த்து , யமபயம் , மட்டுமில்லாதுஎவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம் . 

Thursday 9 January 2014

ஜோதிடம் பொய்ப்பதில்லை.

 ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும். ஜோதிடம் பொய்ப்பதில்லை.

Tuesday 7 January 2014

Numerology

ஜாதக பஞ்சாகப்படி ஒருவரின் நட்சத்திரத்தை குறிக்கும் எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக வைத்தனார். பிறகு அரிச்சனை செய்வதன் மூலம் தான் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் வந்து சேரும் என்று கருதப்பட்டது.
நீளமாக பெயர் அமைந்தவர்களை அழைக்கும் போது அப்பெயரினை சுருக்கி அழைக்க பட்டால். அந்த நீளமான பெயரின் பலன் நிச்சயம் மாறுபடும். அதேசமயத்தில் சுருக்கி அழைக்கப் படும் பெயரின் பலன் அவர்களை ஆளும்.  அழைக்கும் போது அந்த பெயர் எண்ணுக்கான தன்மையும் வாழ்க்கை பாதை மாற்றமும் ஏற்படும். சிறு வயதில் (1 – 20) ஒருவருக்கு முதல் எழுத்தின் ஆளுமையே அதிகம் இருக்கும். பிறகு 21 வயதிற்கு மேல் அவர், அவரின் பெயரை எழுத்து வடிபத்தி அதிகம் உபயோகித்தார் என்றால் அந்த பெயரின் எழுத்துக்களின் கூட்டு எண்ணும் அவர்களை ஆளும்.


செவ்வாய் தோசம் என்றால் என்ன?



திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவோண்டிய விசயம் செவ்வாய் தோசமாகும்.ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் 


1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன் 
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி 
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் 
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிதானே இதை எடுத்துத் தருகிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.

ஏழரை சனி என்ன பன்னும்

ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் வீடு, மனை வாங்கலாமா?

2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்

.

ராசிக்கற்கள்

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் – வைரம்
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

சிம்மம் – மாணிக்கம
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

துலாம் – வைரம்
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு – கனக புஷ்பராகம்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

மீனம் – கனக புஷ்பராக்ம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்

வயது குறைவான ஆனை பெண் திருமணம் பன்னலாமா

வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. பொதுவாக ஆணை விட பெண் 3 முதல் 5 வரை குறைவாக இருப்பது நல்லது.

பயனத்தடை ஏன்

பயணத்தடை படுதல் ஏன்?

யாத்திர போகும் போது கால் இடறினாலோ !

புடவை வேஷ்டி  தடுத்தாலோ அழுது கொண்டு யாரேனும் சென்றாலோ1

பாம்பினையும் முயலையும் கண்டாலோ

பயணத்தை தவிர்ப்பது நல்லது!

ஜோதிடர் பி.பாலச்சந்திரன்

129/386 பெருமாள்மலை
ஈரோடு -638 005
www.tamilnaduastrologer.com