Tuesday 25 March 2014

நல்ல நேரம்

நல்ல நேரம் 

திருமணம் ,கிரகபிரவேசம் போன்ற விசேசங்கலுக்கு நல்ல நேரம் குறிகக சிலர் 
தினசரி காலாண்டரை பார்த்து தாங்கலாகவே குறித்து கொள்கிரார்கள் ,ஆனால் 
தினசரி காலாண்டரில் நிரைய தவறு உள்ளது பஞ்சாங்களில் குறிப்பிடும் நேரமே சரியானதாகும்,அமாவாசை,பௌர்ணமிபோன்ற நேரங்கலும் தவறு உள்ளது ,
தங்கள் குடும்ப ஜோதிடரை அனுகி குறித்து கொள்வது நல்லது

Monday 24 March 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

  ஏழரைச் சனி என்ன செய்யும்?

பிறந்த உடனேயே 20வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.

2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் பெருமையை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.


 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள்.அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார்.

Sunday 23 March 2014

ராசிகற்கள் அதிஷ்ட மோதிரம் 9500574641

ராசிக்கற்கள்


மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். 
இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். 
கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் – வைரம்

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் 
இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் 
வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது.

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது 

அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க 
வல்லது.

சிம்மம் – மாணிக்கம
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். 

இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது

துலாம் – வைரம்
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய 

வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், 
யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை 

அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், 
அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு – கனக புஷ்பராகம்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன 
அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது
மீனம் – கனக புஷ்பராக்ம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது 
மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்

TAMILNADU ASTROLOGER

ஜோதிடம்,திருமணப்பொருத்தம்,எண்கணிதம்,குழந்தைகலுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில்
பற்றிய பிரச்சனைகள் ,தோசங்கள் ,ராசிகல்,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்கலுக்கும் அனுகவும்.ஜோதிடர் பாலச்சந்திரன் .Erode Astrologer,
நேரில் வரமுடியதவர்கள் தட்சனையை எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன்
போன் மூலம் ஜோதிட பலன்கள்  தெரிவிக்கப்படும்.
welcome to Vishnu Jothida Nilayam ,  To know about your future , Send your Name, correct D.O.B, Place of birth and time of Birth and remit RS: …./- Towards consulting fees to the  following  P.Balachandran AXIS Bank , Branch :Erode, A/C No 118010100046321,IFS Code UTIB0000118 Thanking you Website:www.tamilnaduastrologer.com

Saturday 15 March 2014

தீபம் ஏற்றும் முறைகளும், பயன்களும்

தீபம் ஏற்றும் முகபாவம்
1,ஒரு முகம் ஏற்றுவது மத்திம்ம்
2,இரணடு முகம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமை பெருகும்
3,மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகம் தரும்
4,நான்கு முகம் ஏற்றுவது கால்நடை இனத்தை தரும்
5,ஐந்து முகம் ஏற்றுவது செல்வம் பெருகும்


தீபம் ஏற்றும் முறைகளும், பயன்களும்



தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

விளக்கேற்றும் திசை



கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி 
மேற்கு - கடன், தோஷம் நீங்கும் 
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

எண்ணெயின் பலன்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். 
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் 
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் 
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் 
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி 
விளக்கெண்ணெய்- புகழ் தரும் 
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள் 

விநாயகர் - தேங்காய் எண்ணெய் 
மகாலட்சுமி - பசுநெய் 
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் 
பைரவர் - நல்லெண்ணெய் 
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 
                     5
கூட்டு எண்ணெய் 
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் நல்லெண்ணெய்

விளக்கின் தன்மை

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு பீடை விலகும் 
வெள்ளி விளக்கு திருமகள் அருள் கிடைக்கும் 
பஞ்ச லோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும் 
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும் 
இரும்பு விளக்கு சனி கிரக தோஷம் விலகும்.

திருவிளக்கின் சிறப்பு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். . விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.





Wednesday 12 March 2014

ராகு கேது தோஷப் பரிகாரங்கள்

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம். இங்கே ராகு பகவான் தனது மனைவியோடு காட்சி அளிக்கிறார். இங்கு சென்று ராகு பகவானை வழிபாடு செய்தால் ராகு பகவானால் உண்டாகும் அசுப பலன்கள் குறைந்து அனுகூல பலன்கள் அதிகரிக்கும். இங்கு ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறும் அற்புதத்தைக் காணலாம்.

   ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது.
   ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
   கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.